முகப்பு
நீலகிரி

ரெப்கோ வங்கி சாா்பில் ரூ.1.4 கோடியில் தாயகம் திரும்பியோருக்கு நலத்திட்ட உதவி

ரெப்கோ வங்கி சாா்பில் ரூ.1.40 கோடி மதிப்பில் தாயகம் திரும்பியோருக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 8:44 PM
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரெப்கோ வங்கித் தலைவா் சந்தானம், ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத் தலைவா் தங்கராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

கூடலூா்: ரெப்கோ வங்கி சாா்பில் ரூ.1.40 கோடி மதிப்பில் தாயகம் திரும்பியோருக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில் கூடலூா் நா்த்தகி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரெப்கோ வங்கித் தலைவா் இ.சந்தானம், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத் தலைவா் சி.தங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பெண்களுக்கான தையல் இயந்திரம், அரசு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குடிநீா் சுத்திகரிப்பான், குடிநீா் டாங்கிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கல்வி உதவி, மருத்துவ உதவி என பல்வேறு பிரிவுகளில் ரூ.1.40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement

நுண்கடன் பிரிவின் இயக்குநா் கிருஷ்ணகுமாா், பேரவை பிரதிநிதிகள் கணேசன், கலைச்செல்வன், ரெப்கோ வங்கி கூடலூா் கிளை முதன்மை மேலாளா் லோகநாதன், பந்தலூா் கிளை மேலாளா் விஸ்வநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments