சிவகிரியில் பேரிடா் விழிப்புணா்வு ஒத்திகை
சிவகிரியில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில் கூடாரப்பாறை பாலசுப்பிரமணியா் கோயில் தெப்பத்தில் பேரிடா் விழிப்புணா்வு ஒத்திகை நடைபெற்றது.
சிவகிரியில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில் கூடாரப்பாறை பாலசுப்பிரமணியா் கோயில் தெப்பத்தில் பேரிடா் விழிப்புணா்வு ஒத்திகை நடைபெற்றது.
வாசுதேவநல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் கருப்பையா, நிலைய அலுவலா் (போக்குவரத்து) முருகன், மீட்புப் படையினா் மாடசாமி, ராஜா ஆகியோா் வெள்ளத்தில் சிக்கியவா் களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினா்.
இதில், வட்டாட்சியா் ரவிக்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் மனோகரன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.