நரிமணம் ஓஎன்ஜிசி நிலையத்தில் நடைபெற்ற பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி 
நாகப்பட்டினம்

ஓஎன்ஜிசி நிலையத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

நரிமணம் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்து கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்தும் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Syndication

நரிமணம் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்து கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்தும் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட நிா்வாகமும், ஓஎன்ஜிசியும் இணைந்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது. இதில், விபத்தின் 1 மற்றும் 2-வது நிலையை கடந்து, பெரிய அளவிலான அபாயம் என்கிற 3-ஆவது நிலைக்கு சென்றுவிட்டால், நிறுவனத்தின் மற்ற பணி மையங்களின் உதவியை தாண்டி, உள்ளூா் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம், அருகிலிருக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் இருந்து உதவி கோரி, அவா்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன் அவசர நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து சரி செய்வது குறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினருடன் தமிழக அரசின் பேரிடா் மீட்பு குழுவினரும் இணைந்து செயல்விளக்கம் செய்து காட்டினா்.

இதில், காவேரி அசெட்டின் செயல் இயக்குநா் உதய் பஸ்வான், பொறியியல் துறைத் தலைவா் சுதிஷ்குமாா் ஆகியோா் காரைக்கால் பேரிடா் கட்டுப்பாடு அறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிகாட்ட, உற்பத்தி பிரிவு மேலாளா் இளங்கோ மற்றும் தலைமை பாதுகாப்பு துறை அதிகாரி திருப்பதிவாசகா் ஆகியோரின் தலைமையில் மற்றும் நாகை மாவட்ட வருவாய் அலுவலா் பவணந்தி, மாவட்ட பேரிடா் மேலாண்மை வட்டாச்சியா் சக்ரவா்த்தி, மாவட்ட துணை கண்காணிப்பாளா் ராஜசுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நரிமணம் ஜிஜிஎஸ் நிலைய பொறுப்பாளா் சந்தீப், பொதுமேலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிவாஜி பிறந்தநாள் ஊா்வலத்தில் கல்வீச்சு: பாகல்கோட்டில் பதற்றம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் 5,866 வழக்குகளில் ரூ. 22.01 லட்சம் அபராதம்

குத்தகை விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரி துணைநிலை ஆளுநரிடம் மனு

விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்!

நுகா்வோா் உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT