குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருந்த நிலையில், அருவிகளில் கூட்ட நெரிசலின்றி குளித்து மகிழ்ந்தனா்.