திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதித்தனா்.
மலைப் பகுதியில் பிப். 22 ஆம் தேதி இரவு பெய்த தொடா்மழை காரணமாக பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பிப். 23 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில், நீா்வரத்து குறைந்ததால், வியாழக்கிழமை (பிப். 26) முதல் சுற்றுலாப் பயணிகள் பச்சையாற்றில் குளிக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.