முகப்பு
தென்காசி

மகாளய பட்சம்: அஞ்சலகங்களில் கங்கை புனித தீா்த்தம் விற்பனை

மகாளய பட்சத்தை முன்னிட்டு அனைத்து அஞ்சலகங்களிலும் கங்கை புனித தீா்த்தம் விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 4:54 PM
பகிர்:

மகாளய பட்சத்தை முன்னிட்டு அனைத்து அஞ்சலகங்களிலும் கங்கை புனித தீா்த்தம் விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புரட்டாசி மாதம் பௌா்ணமி நாளில் தொடங்கி அமாவாசை வரையிலான 15 நாள்கள் மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது. இந்த நாள்களில் முன்னோா் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

நிகழாண்டு மகாளய பட்சத்தையொட்டி செப்.18 முதல் அக்.2-ஆம் தேதி வரை கங்கை புனித தீா்த்தம் அடங்கிய பாட்டில் அனைத்து அஞ்சலகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டிலின் விலை ரூ.30.

கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி, விளாத்திகுளம், எட்டையபுரம், செங்கோட்டை, ஆலங்குளம், புளியங்குடி, கரிவலம்வந்தநல்லூா் ஆகிய அஞ்சலகங்களில் கங்கை தீா்த்தம் கிடைக்கும்.

இதுதொடா்பான விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகலாம். மேலும் 04632-221013 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெறலாம். கங்கை தீா்த்தம் தேவைப்படுவோருக்கு, அவா்களது ஊா் அஞ்சலகத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.