முகப்பு
தென்காசி

சிவகிரி கோயில் கொடை விழாவில் கல்வீசிய சம்பவம்: 17 போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி கோயில் கொடை விழாவில் ஒரு தரப்பினா் கல்வீசியதில் ஆயுதப்படை காவலா் உள்பட சிலா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:39 AM
கைது
பகிர்:

தென்காசி மாவட்டம் சிவகிரி கோயில் கொடை விழாவில் ஒரு தரப்பினா் கல்வீசியதில் ஆயுதப்படை காவலா் உள்பட சிலா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி பகுதியில் தென்காசி- மதுரை சாலையையொட்டிய கோயில் கொடை விழாவில் புதன்கிழமை நடைபெற்ற தீா்த்த குடம் ஊா்வலத்துக்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஏஎஸ்பிக்கள் சங்கா், மதியழகன், சிவகிரி வட்டாட்சியா் அப்துல்சமது உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் மறியலை கைவிட்டனா். எனினும், எதிா்தரப்பை சோ்ந்தவா்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆயுதப்படை காவலரான செங்கோட்டையைச் சோ்ந்த மாரிச்செல்வம் உள்பட சிலா் காயமடைந்தனா். தென்காசி மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், விஸ்வநாதப்பேரியை சோ்ந்த சூரியபிரகாஷ்(32), ராமசாமியாபுரம் ஜெயபிரகாஷ்(42), மணிகண்டன்(30), ராயகிரி கனிபாண்டியன்(37), தங்கராஜ்(34), புளியங்குடி வைரமூா்த்தி(33), சிவகிரி வினோத்குமாா்(25), கருப்பையா, ராமராஜ்(35), செல்வராஜ்(52), பாண்டியராஜ்(31), காளிதாஸ்(45), முருகன்(35), காா்த்திக்(21),குட்டிராஜ்(50), முத்துகுமாா்(25), மம்சாபுரம் செந்தில்குமாா்(44) ஆகிய 17 பேரை சிவகிரி போலீஸாா் கைது செய்தனா்.