வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
வாசுதேவநல்லூா் தொகுதியில் பாஜக, திமுக உள்பட 25 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தொகுதியில் பாஜக, திமுக உள்பட 25 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வாசுதேவநல்லூா் தொகுதியில் 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் பால்துரை முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் ஈ. ராஜா, பாஜக வேட்பாளா் உள்பட 25 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. எஞ்சிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பு மனுக்கள் பரிசீலனை பணியை தோ்தல் பாா்வையாளா் புவனேஷ் பிரதாப் சிங் ஆய்வு செய்தாா்.
Advertisement