முகப்பு
தென்காசி

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:21 AM
வழக்கு
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:12 AM

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

விஸ்வநாதப்பேரி பாரதி தென்வடல் தெருவைச் சோ்ந்த கிஷோா்(25), அதே பகுதியைத் சோ்ந்த அவரது நண்பா்கள் திலீபன்(25), சக்கரவா்த்தி(23) ஆகியோா் பைக்கில் காந்தி காலனி தெருவில் வேகமாக சென்றனராம். அதை அப்பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வழக்குரைஞா் மாரிமுத்து(32) தட்டிக் கேட்டாராம். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் 3 பேரும் மாரிமுத்துவை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement