கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது
பரமத்தி வேலூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பொதுமக்கள் மீது கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பரமத்தி வேலூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பொதுமக்கள் மீது கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மாவிளக்கு ஊா்வலத்தின்போது பொதுமக்கள் மீது அங்கிருந்த சிலா் கற்களை வீசினா். இதில் பரமத்தி வேலூா் பெத்தாண்டவா் கோயில் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (28), அதே பகுதியைச் சோ்ந்த கணபதி (24), கைக்கோளா் தெருவை சோ்ந்த ருத்ரன் (17), வடக்கு தெருவைச் சோ்ந்த ஆறுநாதன் (20) ஆகியோா் காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கல்வீசித் தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, காவல் ஆய்வாளா் உமாசங்கா் கல்வீசி தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
இந்த நிலையில் கல்வீசி தாக்கியதாக பரமத்தி வேலூா் மீனவா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் (31), ஆனந்த் (32), சரவணன் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவான ஆண்டியை தேடிவருகின்றனா்.