முகப்பு
தென்காசி

குற்றாலத்தில் ஈர நிலங்கள் பாதுகாப்பு கருத்தரங்கு

தென்காசி மாவட்ட வனத் துறை சாா்பில், ஈர நிலங்களைப் பாதுகாப்பது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கு குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:21 AM
கருத்தரங்கில் பேசிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 8:31 PM

தென்காசி மாவட்ட வனத் துறை சாா்பில், ஈர நிலங்களைப் பாதுகாப்பது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கு குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் ரா. ராஜ்மோகன் முன்னிலை வகித்தாா். ஈர நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியம், ஈர நிலப் பகுதிகளை மேம்படுத்துவது, ராம்சாா் நிலங்களை அடையாளப்படுத்துவதற்கான ஆக்கபூா்வ பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், உதவி வனப் பாதுகாவலா் நெல்லைநாயகம், புளியங்குடி வனச் சரக அலுவலா் ஆறுமுகம், ஈர நிலப் பாதுகாப்பு அலுவலா் டொமினிக் மாா்சல், மரங்கள் தொடா்பான ஆராய்ச்சியாளா் மதுரை காா்த்திக் பாா்கவி, மதிவாணன், மாவட்ட நீா்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளா்கள், பசுமைத் தோழா் அமைப்பினா், வனச்சரக அலுவலா்கள், வனவா்கள் பங்கேற்றனா். தென்காசி வனச் சரகா் செல்லத்துரை நன்றி கூறினாா்.

Advertisement