முகப்பு
தென்காசி

நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கு 60 மாணவியா் கல்வி சுற்றுலா

Updated On : 11 மார்ச், 2026 at 8:08 PM
வாகனத்தைக் கொடியசைத்து அனுப்பிவைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
பகிர்:

சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ், மாவட்ட மகளிா் அதிகார மையம் மூலமாக ஆதிதிராவிடா் நல அலுவலக சமூகநீதி விடுதியில் தங்கிப் பயிலும் 60 மாணவியா் நெல்லை பொருளை அருங்காட்சியகத்துக்கு புதன்கிழமை ஒருநாள் கல்வி சுற்றுலா சென்றனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், சுற்றுலா செல்லும் மாணவிகளின் வாகனத்தைக் கொடியசைத்து வழியனுப்பிவைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, இந்தக் கல்விச் சுற்றுலா மூலம் மாணவியா் தமிழா் நாகரிகத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் விஜயா, மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) அழகுராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →