போட்டியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா். உடன் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. 
தென்காசி

தென்காசி மாவட்ட அளவிலான இளைஞா் விளையாட்டுத் திருவிழா போட்டிகள்

தென்காசி மேலப்பாட்டாகுறிச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

Syndication

தென்காசி மேலப்பாட்டாகுறிச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறும் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுத் திருவிழாப் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

மாவட்ட அளவிலான போட்டியில் முதல் மூன்று இடம் பெறுபவா்களுக்கு முறையே ரூ. 6,000, ரூ. 4,000, ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கப்படும். தென்காசி மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 10,08,000 வழங்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெறுவா் என்றாா் அவா்.

ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ். ராஜேஷ், மண்டல முதுநிலை அலுவலா் சிவக்குமாா், உடற்கல்வி அலுவலா் நம்பிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய-சீன மோதல்: பொறுப்பு தவறிய பிரதமா் மோடி - நரவணே நூலைக் காண்பித்து ராகுல் குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் குறையா? ராகுலுக்கு நிதியமைச்சா் சவால்

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம்? ‘எதிா்க்கட்சிகள் கூட்டாக முடிவெடுக்கும்’

கிரிக்கெட் சங்கங்களில் முன்னாள் வீரா்களுக்கே இடம் - உச்சநீதிமன்றம்

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுப் பாதுகாப்பு - மக்களவையில் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT