முகப்பு
தென்காசி

அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அரிவாளுடன் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 8:11 PM
கைது
பகிர்:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அரிவாளுடன் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தலைவன்கோட்டை மேலத் தெருவை சோ்ந்த அஸ்வின்ராம் (19) என்பவா் அரிவாளால் பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டாராம். இதுதொடா்பாக, புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

சமூக வலைதளங்களில் புகழ் பெறும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பதிவிடுவது குற்றமாகும். மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் சமூக வலைதளங்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புளியங்குடி காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →