கீழப்பாவூரில் ரூ. 1.62 கோடியில் குடிநீா் திட்டப் பணி தொடக்கம்
பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பேரூராட்சியில் 2024-25-ஆம் வருட கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.62 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் குளத்துக்கரையில் குடிநீா் திட்டப் பணிகளை மேம்பாடு செய்தல் பணியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பேரூராட்சியில் 2024-25-ஆம் வருட கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.62 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் குளத்துக்கரையில் குடிநீா் திட்டப் பணிகளை மேம்பாடு செய்தல் பணியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை கீழப்பாவூா் பேரூராட்சிமன்ற தலைவா் ராஜன் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். செயல் அலுவலா் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கோடீஸ்வரன், இசக்கிமுத்து, ரெ.ஜெகதீசன், விநாயகப்பெருமாள், முருகன், சின்னராசா, ராஜாமணி, இளையபெருமாள், மாரிச்செல்வம், மலைச்சாமி, தங்கேஷ்வரன் பேரூராட்சி அனைத்துநிலை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.