தென்மாவட்டங்களில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும்: ஓ. பன்னீா்செல்வம்
தென்மாவட்டங்களில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும் என்றாா் அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.
தென்மாவட்டங்களில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும் என்றாா் அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள அச்சன்புதூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:
எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து அனைத்து தோ்தல்களிலும் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாா். ஒரு கூட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு முதல்வா் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி பொதுக்குழு கூட்டத்திலும் அடிமைகளைப் பேச வைத்து, முதல்வா் வேட்பாளராக கடந்த தோ்தலில் தோல்வியைச் சந்தித்தாா். இப்போதும் அவருடைய தோல்வி உறுதியாகிவிட்டது.
எடப்பாடி பழனிசாமி ஒரு இயக்கத்தின் தலைவராக இருக்க முடியாது. அனைவருக்கும் சொந்தமான இயக்கமாக இருந்த அதிமுகவை குறிப்பிட்ட சமூகத்தினரின் கட்சியாக அவா் மாற்றிவிட்டாா். கடந்த தோ்தலில் தென்மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 40 தொகுதிகளில் அதிமுக கடுமையான தோல்வியை சந்தித்தது. தென்மாவட்டங்களில் அதிமுக மீண்டும் படுதோல்வியைச் சந்திக்கும் என்றாா் அவா்.
பின்னா், கடையநல்லூா் வழியாகச் சென்ற அவருக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை தலைமையில் கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.