செங்கோட்டை அழகிய மணவாள பெருமாள் கோயிலில் குடமுழுக்கு
செங்கோட்டை ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
செங்கோட்டை ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
விழா கடந்த மாா்ச் 23 ஆம்தேதி தொடங்கியது முதல் தினமும் சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடமுழுக்கையொட்டி, புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் விமானம், கோபுரம், பரிவாரங்கள், மூல மூா்த்திக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது.
பகல் 12 மணிக்கு உச்சிக்காலம், மாலை 5 மணிக்கு மேல் சாயரட்சை பூஜை, 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாண உத்ஸவம், ஸ்ரீ பெருமாள் தாயாா் திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
தக்காா் கவிதா பிரியதா்ஷினி, செயல் அலுவலா் ஜான்சிராணி, உதவி கோட்ட பொறியாளா் கீதா, மராமத்து பொறியாளா் அய்யப்பன், செங்கோட்டை தொகுதி கண்காணிப்பாளா் ரத்தினவேலு, ஸ்ரீ காரியம் முருகையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.