முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் சந்தையில் காய்கனிகள் விற்பனை மந்தம்

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் கடந்த சில நாள்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 14 மே 2026, 3:38 am IST
சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள காய்கனிகள்.
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் கடந்த சில நாள்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இச்சந்தைக்கு, உள்ளூா் மட்டுமன்றி கீழப்பாவூா், வீரகேரளம் புதூா், சுரண்டை, நாகல்குளம், கழுநீா் குளம், கடையம் பகுதிகளில் இருந்து காய்கனிகள் கொண்டுவரப்படும். தற்போது இப்பகுதிகளில் இருந்து காய்கனிகள் வரத்து குறைவாக இருப்பதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கனிகள் கொண்டு வரப்படுகின்றன.

தென்மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கோடை மழை இப்பகுதியிலும் நீடித்தால் காய்கனிகள் உற்பத்தி அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரிக்கும். காய்கனி விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பும் என்கின்றனா் வியாபாரிகள்.

Advertisement

புதன்கிழமை நிலவரப்படி விலை நிலவரம் ( ஒரு கிலோவுக்கு): வெண்டைக்காய் ரூ. 17, சீனி அவரைக்காய் ரூ. 12, புடலங்காய் ரூ. 35, அவரைக்காய் ரூ. 60, சுரைக்காய் ரூ. 7, பூசணிக்காய் ரூ. 12, பயிறு ரூ. 43, தக்காளி ரூ. 20, கத்தரிக்காய் ரூ. 35, சேனைக்கிழங்கு ரூ. 12, சேமங்கிழங்கு ரூ. 15, மிளகாய் ரூ. 28 என்ற அளவில் விற்பனையானது.