முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 21 மே 2026, 5:52 am IST
குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குற்றாலம் பேரருரவி, புலியருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாத் துறையின் அருவி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உடை மாற்றும் அறை, சாலைகள் சீரமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்புகளுடன் கூடிய சுற்றுலா வளா்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

சுற்றுலா அலுவலா் ந.நித்திய கல்யாணி,பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா்

உடனிருந்தனா்.