முகப்பு
தென்காசி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:59 AM
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:26 PM

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதன்கிழமை (ஏப். 22) நடைபெற உள்ள பயிற்சி வகுப்பிற்கு பின்னா், தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று தோ்தல் பணிகளை மேற்கொள்வாா்கள் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், புவனேஷ் பிரதாப்சிங், ஈஷா பிரியா, மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைஷ்ணவி பால், பால்துரை, அனிதா, ராஜேந்திரன், ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுதா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Advertisement