திருநெல்வேலி

கடையத்தில் விஷம் குடித்த இளைஞர் சாவு

DIN

கடையம் பாரதி நகரில் மதுவில் விஷம் கலந்து குடித்த இளைஞர் உயிரிழந்தார்.
கடையம் பாரதிநகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் இசக்கிமுத்து (30). இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம். இதனால் வேலைக்குச் செல்லாமல் இருந்தாராம். இதுகுறித்து வீட்டில் அடிக்கடி தகராறு எற்படுமாம். இந்நிலையில் ஆக. 2 ஆம் தேதி இசக்கிமுத்து மதுவில் விஷம் கலந்து குடித்தாராம்.
அவரை உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
களக்காடு அருகே தீக்காயமடைந்த இளம்பெண் சாவு
களக்காடு, ஆக.12: களக்காடு அருகே 18 தினங்களுக்கு முன் தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார்.
களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தையைச் சேர்ந்த இசக்கிதாஸ் மனைவி முத்துலட்சுமி (29). இத்தம்பதிக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 24ஆம் தேதி முத்துலட்சுமி சமையல் செய்த போது புடவையில் பரவிய தீ உடலில் பரவியதில் காயமடைந்தார். கடந்த 18 தினங்களாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வெள்ளிக்கிழமை இறந்தார். இதுகுறித்து களக்காடு காவல் உதவி ஆய்வாளர் வேல்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT