திருநெல்வேலி

திறன் படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பெற வாய்ப்பு

DIN

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் வெள்ளிக்கிழமை (டிச. 8) முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநர் (பொ) ம. தேவவரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்) இம்மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பள்ளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள U​S​ER ID, PA​S​S​W​O​R​D பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் அல்லது தலைமையாசிரியர் ஆகியோர் WW​W.​D​G​E.​T​N.​G​O​V  என்ற இணையதளம் மூலமாக வெள்ளிக்கிழமை (டிச. 8) முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT