திருநெல்வேலி

நெல்லையில் 4 மாவட்ட கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க ஊழியர்கள் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், வருடாந்திர ஊதிய உயர்வு, பிற படிகளை மீண்டும் வழங்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையில் வழங்கப்படாமல் விடுபட்ட பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் சு. பத்மராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலர் எஸ். சாம்சுந்தர்ராஜா, மாவட்டச் செயலர் ஜெ. பெனடிட்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பின் நிறுவனர் எப்.ஏ. சேவியர், மாநில அமைப்புச் செயலர் கே.வி. மகாலிங்கம், மாநில துணைத் தலைவர் வி. சேதுராஜ், மாநில இணைச் செயலர் சேஷன், மண்டலச் செயலர் துர்காபரமேஸ்வரன், மண்டலத் தலைவர் முத்துகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் எம். பச்சைபெருமாள், குமரி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், விருதுநகர் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் சிவக்குமார், திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT