திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

DIN

சீவலப்பேரி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
சீவலப்பேரி அருகேயுள்ள குப்பக்குறிச்சி தங்கம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செம்புக்குட்டி மகன் தங்கசுடலைமுத்து (28). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், வீட்டில் மின்வயரை பழுது நீக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததாம். பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். 
விஷம் குடித்தவர் சாவு: சுத்தமல்லி அருகேயுள்ள சங்கரன்திரடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). விவசாயியான இவர், விஷம் குடித்து மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT