முகப்பு
திருநெல்வேலி

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

பாளையங்கோட்டை அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இறந்தார்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 7:15 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இறந்தார்.
தாழையூத்து வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஹரிராமன் மகன் செல்லத்துரை (60). தொழிலாளி. இவர் சனிக்கிழமை பாளையங்கோட்டை அருகே பர்கிட் மாநகரிலுள்ள தோட்டத்தில் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.