நரசிங்கநல்லூரில் திருவாசக முற்றோதுதல்
பேட்டை அருகேயுள்ள நரசிங்கநல்லூர் அருள்மிகு குலசேகரமுடையார் சமேத விசாலாட்சி அம்பாள் கோயிலில், திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
பேட்டை அருகேயுள்ள நரசிங்கநல்லூர் அருள்மிகு குலசேகரமுடையார் சமேத விசாலாட்சி அம்பாள் கோயிலில், திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
துர்கா அபிராமி திருவாசகம் முற்றோதுதல் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குழுவின் செயலர் மு.கணேசன், மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சுவாமிக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பிடம் பெறவும், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. ஆனந்தகூத்தன் அறக்கட்டளை சார்பில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. தேசிகராணி, நிர்மலா, லலிதா, செல்வவள்ளி, முத்துமாலை, ஜானகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.