பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்
பாளையங்கோட்டை சிறையில் விசாரணைக் கைதிகள் மோதிக்கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.
பாளையங்கோட்டை சிறையில் விசாரணைக் கைதிகள் மோதிக்கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சுமாா் 1,300-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கும் இடம் தொடா்பாக கைதிகளுக்கிடையே பிரச்னை ஏற்பட்டதாம்.
பின்னா், புதன்கிழமை மாலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் இருதரப்பாக பிரிந்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில் 2 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Advertisement
இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.