பழையபேட்டையில் நகை மோசடி: பெண் கைது
பழையபேட்டையில் நகையை மோசடி செய்ததாக பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பழையபேட்டையில் நகையை மோசடி செய்ததாக பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பழையபேட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (44). அதே பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (45). உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தேவை எனக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமியின் நகையை பெற்ற பேச்சியம்மாள் அதன்பின்பு திருப்பி கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தபோது நகையை அடகுவைத்திருப்பது தெரியவந்ததாம். காவலர்களிடம் அறித்த வாக்குறுதிபடி நகையை திருப்பிக் கொடுக்காததால் பேட்டை காவல் நிலையத்தில் லட்சுமி மீண்டும் புகார் அளித்தாராம். அதன்பேரில் போலீஸார் பேச்சியம்மாளை கைது செய்தனர். முன்னதாக அவரை கைது செய்ய ஆட்சேபம் தெரிவித்து போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.