மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
பாளையங்கோட்டை சாந்திநகரில் மகளிர், குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
பாளையங்கோட்டை சாந்திநகரில் மகளிர், குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
சட்ட உதவி தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு மாவட்ட நீதிபதி டி. ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் வி. இராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில், சட்டம் சார்ந்த தீர்வுகள், அரசின் நலத் திட்ட உதவிகள், நிலம் தொடர்பான தீர்வு போன்றவை குறித்து பொதுமக்கள் நீதிபதிகளிடம் மனு அளித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசகர் எஸ். புகழேந்திபகத்சிங் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் என். கணேசன் நன்றி கூறினார்.