மாணவர் விடுதிகளில் குடிநீர் இயந்திரம் திறப்பு
திருநெல்வேலியில் அரசு மாணவர் விடுதிகளில் ரூ. 15 லட்சம் மதிப்பில் குடிநீர் இயந்திரம் திறக்கப்பட்டது.
திருநெல்வேலியில் அரசு மாணவர் விடுதிகளில் ரூ. 15 லட்சம் மதிப்பில் குடிநீர் இயந்திரம் திறக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே, மாணவர்கள் தங்கி இருக்கும் 3 விடுதிகளில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் நிறுவும் வகையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப் பட்டது.
இதையடுத்து, மாணவர் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. குடிநீர் இயந்திரங்களை இயக்கி திறந்து வைத்தார். இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி. வின்சர், பகுதிச் செயலர் அப்துல் கயூம், முன்னாள் செயலர் வி.எஸ்.டி. சாகுல்ஹமீது, வி. அருள்இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.