திருநெல்வேலி

தமிழர் விடுதலை களத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

பட்டியல் இனத்தில் உள்ள 7 உள்பிரிவுகளை இணைக்கக் கோரி, திருநெல்வேலி சந்திப்பில் தமிழர் விடுதலை களத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பம், வாதிரியார், கடையர், தேவேந்திரகுலத்தான், பண்ணாடி, காலாடி, பள்ளர் ஆகிய 7 உள் பிரிவுகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் முத்துகுமார் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் சுபாஷ்பாண்டியன் முன்னிலை வகித்தார். நிறுவனர்-தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.  நிர்வாகிகள் வேங்கை ராஜா, சேகர், கட்டபொம்மன், சுரேஷ்பாண்டியன், வழக்குரைஞர் மாரியப்பன், ஜெயராஜ் பாண்டியன்,  மணி பாண்டியன், லெனின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT