பட்டியல் இனத்தில் உள்ள 7 உள்பிரிவுகளை இணைக்கக் கோரி, திருநெல்வேலி சந்திப்பில் தமிழர் விடுதலை களத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பம், வாதிரியார், கடையர், தேவேந்திரகுலத்தான், பண்ணாடி, காலாடி, பள்ளர் ஆகிய 7 உள் பிரிவுகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் முத்துகுமார் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் சுபாஷ்பாண்டியன் முன்னிலை வகித்தார். நிறுவனர்-தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். நிர்வாகிகள் வேங்கை ராஜா, சேகர், கட்டபொம்மன், சுரேஷ்பாண்டியன், வழக்குரைஞர் மாரியப்பன், ஜெயராஜ் பாண்டியன், மணி பாண்டியன், லெனின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.