முகப்பு
திருநெல்வேலி

தென்காசியில் நகராட்சிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி நகராட்சி ஊழியர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

தென்காசி நகராட்சி ஊழியர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தென்காசி நகராட்சியில் பிட்டராக பணியாற்றிவரும் நவாஸ்முகம்மது இஸ்மாயில் மீது அவதூறு பரப்பும் வகையில் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதுபோன்ற தவறான தகவல்களுடன் நகராட்சி ஊழியர்கள் மீது சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 
தென்காசி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி  அனைத்துப் பணியாளர்களும் கலந்துகொண்டனர். பின்னர்,  காவல்கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →