திருநெல்வேலி

சாலைப் பாதுகாப்புப் பயிலரங்கு

DIN

பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்புப் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.
இளையோர் செஞ்சிலுவை சங்கம், வட்டார போக்குவரத்துக் கழகம், சிட்டி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஆகியவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செங்கோட்டுவேல் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வரவேற்ரார். சாலைவிதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம், போக்குவரத்து சட்டங்கள், வாகனம் வைத்திருப்போர் தெரிந்திருக்க வேண்டிய விழிப்புணர்வுகள் குறித்து பயிலரங்கில் விளக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கரவீரபத்திரன், சிட்டி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நிர்வாகி நைனா முகம்மது ஆகியோரும் பேசினர். பேராசிரியர் ரந்தீர்குமார், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT