திருநெல்வேலி

குற்றாலம்  அருவிகளில் மிதமான தண்ணீர்

DIN

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மிதமான மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் விழத்தொடங்கியது.
கடந்த சில தினங்களாக கோடைவெயில் சுட்டெரித்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதோடு, மிதமான சாரல் மழையும் பெய்தது. குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் பிற்பகல் முதல் தண்ணீர் விழத்தொடங்கியது.
குற்றாலம் பேரருவியில் பரவலாகவும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. மழையின் காரணமாக கோடைவெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT