திருநெல்வேலி

சாலைப்பணியால் பாதிக்கப்பட்ட  நில உரிமையாளர்களுக்கு உதவிகள்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி-சங்கரன்கோவில், நான்குனேரி-உவரி சாலைகள் நில எடுப்பு செய்து விரிவாக்கம் செய்யப்பட்டன. இந்தச் சாலைகள் விரிவாக்கத்தின்போது நிலஎடுப்பு செய்து பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் மறுவாழ்வு மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் அத்தியாவசிய தேவைகள் மேலும் வாழ்வாதார தேவைக்கான உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி லட்சுமி விலாஸ் வங்கி உதவியுடன் மோட்டார் சைக்கிள், தொழில் உபகரணங்கள் உள்பட 6 பேருக்கு ரூ.3.31 லட்சம் மதிப்பிலான உதவிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் திருச்சி தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி,  மறுவாழ்வு அலுவலர் அமுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT