ஆசிரியர் தகுதித் தேர்வு பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி
பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சியளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சியளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு (ஆ.உக்), பட்டயப்படிப்பு (ஈ.ப.உக்) முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேசிய அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருநெல்வேலி, தொலைபேசி எண்: 0462-250157 என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் 29ஆம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.