முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளையில் பைக் விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு

திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமுற்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 22 மே, 2018 at 5:16 AM
பகிர்:

திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமுற்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திசையன்விளை அருகில் உள்ள சவேரியர்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தேவசகாயம் (48). விவசாயி. இவர், மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது மன்னார்புரம் பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் திங்கள் கிழமை உயிரழந்தார். திசையன்விளை காவல் உதவி ஆய்வாளர் சத்யா வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.