தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து இம் மாதம் 31 ஆம் தேதி வரை இத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் துறைத் தேர்வுகள் இம்மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை (முற்பகல் மற்றும் பிற்பகல்) இருவேளைகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாளை.யில் உள்ள ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, மேரி சார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் வியாழக்கிழமை தேர்வு நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தடைபடாத மின்சாரம், சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.