திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

DIN

சங்கரன்கோவில் அருகே விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
சங்கரன்கோவில் அருகே ஊத்தாங்குளத்தைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (60). இவரது மனைவி சீனியம்மாள். இருவரும் புதன்கிழமை தங்களது தோட்டத்தில் பயிரிட்டிருந்த கேப்பைக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றார்களாம். அங்கு, மின் மோட்டாருக்கான வயர் நிலத்திற்கு அடியில் பதிக்கப்பட்டிருந்ததாம். இந்த வயரை தண்ணீர் பாய்ச்ச செல்லும்போது திருமலைச்சாமி மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கியெறியப்பட்ட அவர், அந்த இடத்திலேயே இறந்ததார். இச்சம்பவம் குறித்து சின்னக்கோவிலான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

SCROLL FOR NEXT