திருநெல்வேலி

வண்ணார்பேட்டையில்  ரூ.1 லட்சம் பொருள்கள் திருட்டு

DIN

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டிச் சென்றாராம். புதன்கிழமை காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். கடையில் இருந்த 40 அரிசி மூட்டைகள், எண்ணெய் டின்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்மநபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்ததும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT