திருநெல்வேலி உடையார்பட்டி தாமிரவருணி நதிக்கரையில் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில் சார்பில் தீப ஆரத்தி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தாமிரவருணி மகா புஷ்கர விழா நடைபெற்று வருவதையொட்டி, திருநெல்வேலி இஸ்கான் கோயில் சார்பில் இந்த வழிபாடு நடைபெற்றது. அருள்மிகு உச்சிஷ்ட கணபதி கோயிலிலிருந்து கிருஷ்ணர் கவுராவாகவும், பலராமர் விதாயாகவும் எழுந்தருளினர். அங்கிருந்து கவுரா, விதாய் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து உடையார்பட்டியில் அருள்மிகு பாலசுப்பிரமணியர் ஆலயம் அருகில் தாமிரவருணி ஆற்றுப் படித்துறையில் கவுரா, விதாய் சுவாமிகள் முன் தீப ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. மந்திரங்கள் முழங்க தாமிரவருணியில் தீப ஆரத்தி விடப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.