திருநெல்வேலி

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி

DIN

திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சிந்தாந்த நேர்முகப் பயிற்சி மையம் சார்பில் நேர்முகப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்பில், சிவஞான சித்தியார் சுபக்கம் என்ற நூலுக்கு முனைவர் மீ.முருகலிங்கம் விளக்கம் அளித்தார். மாணவர் ஐயப்பன் குழுவினர் மாகேஸ்வர பூஜை நடத்தினர். பயிற்சி வகுப்பில் 80 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முத்துசுவாமி தலைமையில் முன்னாள் மாணவர்கள் முத்துக்குமாரசுவாமி, வள்ளிநாயகம், முருகேசன், கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அடுத்தப் பயிற்சி வகுப்பு அக். 14ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT