திருநெல்வேலி

ரயில் மோதி காயமடைந்த இளைஞர் சாவு

DIN

திருநெல்வேலியில் ரயில் மோதி காயமடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பழனிசாமி மகன் கண்ணதாசன் (35). திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வந்த இவர், மூன்றாவது நடைமேடையில் இருந்து நான்காவது நடைமேடைக்கு கடக்க முயன்றபோது திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணதாசனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT