திருநெல்வேலி

மின் கம்பம் முறிந்து விழுந்து மின்வாரிய ஊழியர் காயம்

DIN

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் பழுது நீக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட மின் ஊழியர்,  மின் கம்பம்  முறிந்து விழுந்ததால் பலத்த காயமடைந்தார். 
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் ஒரு கடைக்கு  சென்ற மின் கம்பியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய, மின் கம்பத்தில் மின் ஊழியர் திங்கள்கிழமை ஏறியுள்ளார். ஏற்கெனவே, அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியும் அரித்து பலமிழந்த நிலையில் இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் மின் கம்பத்தில் ஏறியதால், அது திடீரென முறிந்து அருகில் உள்ள கட்டடத்தின் மீது சாய்ந்தது. இதனால்,   மின் ஊழியர் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  இதேபோல், மாநகரின் பல பகுதிகளில்  மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றை சரி செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT