திருநெல்வேலி

நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (செப்.20) நடைபெறுகிறது.
இது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. 
இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு எரிவாயு உருளை பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு, முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம்,  முறைகேடுகள் குறித்த குறைகளை தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT