திருநெல்வேலி

நெல்லையில் குடிநீர்க் குழாய் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

DIN

திருநெல்வேலியில் வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தாமிரவருணி ஆற்றில் அண்மையில்  ஏற்பட்ட வெள்ளத்தால், மேலப்பாளையம் மண்டலப் பகுதிக்கு குடிநீர் அளிக்கும் கொண்டாநகரத்தில் பிரதான குழாய்கள் சேதமடைந்தன. இந்தக் குழாய்களைச் சீரமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மேலப்பாளையம் மண்டலத்தில் 28 முதல் 38 ஆவது வார்டு வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், போர்க்கால அடிப்படையில் குழாய்களை சீரமைக்கும் பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். தற்போது மாற்று ஏற்பாட்டின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
ஆகவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் என மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT