திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.ஏ.ஓ.சாதிக் தலைமை வகித்தார். 
மாநிலச் செயலர்கள் யூசுப் அலி, செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் ஜமால் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் முஹம்மது நவாஸ், காசிம், மைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT