திருநெல்வேலி

அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயில் தேரோட்டம்

DIN

வடக்கு விஜயநாராயணம் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோயிலின் ஆடி மாத பிரமோற்சவ விழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து, தினமும் இரவில் அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், கருடாழ்வார் வாகனம், யானை வாகனம், புன்னைமர வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம், தோளுக்கினியான் வாகனம்  ஆகியவற்றில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை காலை  தேரோட்டம் நடைபெற்றது. இதில்  திரளான மக்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை வடக்கு விசயநாராயணம் தர்மசாலா சார்பில் விஜயநாராயணசுவாமி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT