திருநெல்வேலி

தொழிலாளி மீது தாக்குதல்: இருவர் கைது

சங்கரன்கோவில் அருகே நிலத் தகராறு தொடர்பாக கூலித் தொழிலாளியைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

DIN

சங்கரன்கோவில் அருகே நிலத் தகராறு தொடர்பாக கூலித் தொழிலாளியைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் அருகே சீவல்ராயனேந்தலைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் மாரிச்சாமி (30), கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் மணிகண்டன் (35), பூசன் மகன் சீனிப்பாண்டியன் (41) ஆகியோருக்குமிடையே பொது நடைபாதை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன்பு வீட்டு முன் மாரிச்சாமி நின்றுகொண்டிருந்தபோது, மணிகண்டன் டார்ச் லைட்டை அவர்மீது அடித்தாராம். இதை மாரிச்சாமி தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மாரிச்சாமியை மணிகண்டன், சீனிபாண்டியன் உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மாரிச்சாமி அளித்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய போலீஸார் மணிகண்டன், சீனிப்பாண்டியன் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT