திருநெல்வேலி

எவரெஸ்ட் மெட்ரிக். பள்ளியில் வட்டார விளையாட்டு போட்டி

கடையநல்லூர் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் எவரெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.

DIN

கடையநல்லூர் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் எவரெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் கடையநல்லூர் வட்டாரத்திலுள்ள 500 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். தடகளப் போட்டிகளை கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி நிர்வாகி அசன் மக்தூம் ஆலிம்சாகிபு தலைமையில், கடையநல்லூர் வட்டார விளையாட்டுச் செயலர் முகமதுபுகாரி முன்னிலையில், எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் அப்துல்காதர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தனித்திறன் மேம்பாட்டாளர் அப்துல்காதர் கோப்பைகளை வழங்கிப் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தஸ்லிம், முகம்மது இப்ராஹிம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT